தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
சென்னை, டிச.29-
தருமபுரி மாவட்டம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அணையிலிருந்தும் இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று முதல் (29-12-2021) தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
தருமபுரி மாவட்டம் - சின்னாறு நீர்த்தேக்கம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-2022 (பசலி 1431) ஆம் ஆண்டு பாசனத்திற்கு 29.12.2021 முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் தருமபுரி மாவட்டத்திள்ள பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு பயன் பெறும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி அணை
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில், கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடது புற பிரதானக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு 30.12.2021 முதல் 28.04.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9012 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments