Breaking News

தமிழகத்தில் முதல்முறையாக ரோபோ மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் வசதி தொடக்கம்

வேலூர், டிச.29-

தமிழகத்தில் முதல்முறையாக ரோபோ மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் வசதியை வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூளை அறுவை சிகிச்சையை ஆறு மணிநேரத்தில் ரோபோ செய்து முடிக்கும். நாட்டில் இந்த ரோபோ அறுவை சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் கேரளா அமிர்தா மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், மூன்றாவதாக வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வலிப்பு நோய் கண்டறியும் மருத்துவ பிரிவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்.


No comments

Thank you for your comments