மணப்பள்ளியில் அடிப்படை வசதி கேட்டு ஆர்பாட்டம்!
நாமக்கல், டிச.21-
மோகனூரை அடுத்த மணப்பள்ளியில் அடிப்படை வசதிகள் கேட்டு பாஜ சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட மோகனூரை அடுத்த மணப்பள்ளி ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாகவே 100 நாள் வேலை வழங்கப்படாததைக், மழைக்காலத்தில் பழுதான சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரியும், ஓலப்பாளையம் பஞ்சாயத்தில் அருந்ததியர் தெருவுக்கு ஒதுக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றும், பழுதுப்ட கைப் பம்பினை பழுது நீக்க வேண்டும் என்றும், புதுப்பாளையம் பஞ்சாயத்து வள்ளியப்பம்பட்டி கிராமத்தில் நீண்ட நாட்களாக பழுதுபட்டு இருக்கும் அரசினர் ஆரம்ப பள்ளியின் மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மோகனூர் ஒன்றியத் தலைவர் ஜீவானந்தம், பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், வசந்தகுமார், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் விக்னேஷ்வரன், ஒன்றிய துணைத்தலைவர் பழனியாண்டி, பொருளாளர் ஜோதி, கிளைத்தலைவர் பூவரசன் ஆகியோர் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments