தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல், டிச.21-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நாமக்கல் மாவட்டம் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.12.2021 அன்று நடைபெறுகிறது..
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, வட்டார அளவிலானவேலைவாய்ப்பு முகாம் எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகில் 23.12.2021 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.இந்த வேலை வாய்ப்பு முகாமில், நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று சரியான நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற நிறுவனங்கள் திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் அலுவலக தொலைபேசி எண்.04286 - 281131க்கு தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22.12.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
எனவே, நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த வேலையில்லா (ஆண்-பெண் இருபாலரும்) இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments