Breaking News

ஆசிரியர் இல்லாமல் கல்வி அறிவை இழக்கும் மாணவர்கள்... ஆதிதிராவிடர் நல துக்கப்பள்ளியின் அவலம்..

பாப்பிரெட்டிப்பட்டி:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துவக்கப்பள்ளி , மற்றும் தொடக்க பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழலில் படிக்கும் குழந்தைச்செல்வங்கள் கல்வியறிவையும் பாதுகாப்பையும் இழந்து வருகின்றனர். 


ஏற்கனவே கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடிய நிலையில் மாணவர்கள் கல்வியறிவில் குன்றிய நிலையில் உள்ளனர். 

தமிழ்நாட்டில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5000 க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. 

தமிழக அரசின் கல்வித்துறை நிர்ணயித்திருக்கும் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30.  இந்நிலையில், தமிழக பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் செயல்படுத்தவும் பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அரசு பள்ளிகள் செயல்படுகின்றன... 

இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நல துக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 82 மாணவர்கள் உள்ளனர்.

30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கும் சூழலில் தற்பொழுது இந்த பள்ளிக்கூடத்தில் 82  மாணவர்களுக்கும்  ஒரு ஆசிரியர் மட்டும் இருக்கின்றனர்.  மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 82 மாணவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆசிரியராவது இருக்கவேண்டும். 

ஆனால் இந்த பள்ளியில், 82 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருப்பதால் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பாடம் சொல்லி கொடுப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. 

அதுமட்டுமின்றி  82  மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும்  உள்ள உறவுகள் சரியாக இருக்காது.  மாணவர்களுக்கு சரியான கல்வி அறிவு கிட்டுவது கடினமாக இருக்கின்றது-.  

சரியான கல்வி அறிவு கிடைக்கவில்லை என்ற நோக்கில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

கி அதியமான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞரணி துணை செயலாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  கி.அதியமான் வேண்டுகோள் விடுத்தாவது,

அரசு கவனத்தில் கொண்டு பள்ளிக்கூடங்களில்  கூடுதலாக இரண்டு ஆசிரியர் நியமிக்கபடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கி.அதியமான் கோரிக்கை வைத்துள்ளார்.

நிருபர் எம் எஸ் பி மணிபாரதி

No comments

Thank you for your comments