Breaking News

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் திமுக இளைஞரணி செயலாளர்-சேப்பாக்கம்:திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்  அவர்களின் ஆணைக்கிணங்க செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் நகர திமுக 48வது வார்டு திமுக சார்பில் திமுக நிர்வாகி அம்மன் பில்டர்ஸ் எஸ்.தாஸ் ஏற்பாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குடும்பத்துக்கு அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, உள்ளிட்டவற்றை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாணவரணி செயலாளர்- காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம்,


மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக்,மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், நகர அவைத்தலைவர் சந்துரு, நகர துணை செயலாளர் ஜெகன்நாதன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, நாத்திகம் நாகராஜ், எஸ்.தில்லிபாபு, சாட்சி சண்முகசுந்தரம், இலக்கியணி சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






No comments

Thank you for your comments