உலக மாற்றுத்திறணாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ஈரோடு :
வீரப்பன்சத்திரத்தில் நந்தா கல்வி நிறுவனம் மற்றும் சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கம் ஆகியவை இனைந்து உலக மாற்றுத்திறணாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் தொடங்கி வீரப்பன்சத்திரம் பேருந்து நிருத்தும் வரை நடை பெற்றது.
இந்த பேரணியை ஈரோடு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கணகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் பொருளாதாரமின்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்ட்டது. இதில் நந்தா கல்வி நிறுவன அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments