Breaking News

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் மகளிர் திட்டமும் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

 தூத்துக்குடி, டிச.29-

புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் மகளிர் திட்ட இணை இயக்குனர் வீரபத்திரன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு முகாமில் 314 இளைஞர்கள் கலந்து கொண்டனர் இதில் 123 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ 5 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் வசந்தா மற்றும் கிராம ஊராட்சி சுரேஷ் மாவட்ட வேலை தொழில் நெறி பட்டு மையம் மற்றும் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் செல்வி, பிரியங்கா மற்றும் தூத்துக்குடி வட்டார இயக்க மேலாளர் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments