Breaking News

மாணவனை மிருகத்தனமாக தாக்கியதை வன்மையாக கண்டிக்க தக்கது... வானதி ஸ்ரீனிவாசன்

கோவை

கோவையில் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை மிருகத்தனமாக தாக்கியதை வன்மையாக  கண்டித்து தெற்கு தொகுதி எம்எல்ஏ  திருமதி. வானதி ஸ்ரீனிவாசன்   அறிக்கை விடுத்துள்ளார் ..

'மாதா பிதா குரு தெய்வம்' என்று நாம் வணங்கும் தெய்வத்திற்கும் மேலாக குருவை வணங்குகிறோம் ..ஏனென்றால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர் ஆசிரியர். சுயநலம் பாராது  ஏணியாய் இருந்து மாணவர்கள் வாழ்வின்  முன்னேற்றத்திற்கு அடித்தளமிடுபவர் ...

அப்படிப்பட்ட புனிதமான பணியில் இருக்கும்  ஆசிரியர் ஒருவர் கோவையை சேர்ந்த தனியார் பள்ளியில்  11-ஆம் வகுப்பு படிக்கும்  மாணவனை  இறுக்கமான உடை அணிந்து வந்தார் என்பதற்காக மிருகத்தனமாக தொடர்ந்து அரை மணி நேரம் அடித்துள்ளார். இதனால் அந்த மாணவரின் உடலில் பல பாகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது கண்டிக்கத்தக்கது ..

அடியாத  பிள்ளை படியாது என்று சொல்லுவார்கள் ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு இந்த மாதிரி காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது என்பது ஆசிரியரின் மனநிலையில் ஏதோ கோளாறு என்று தோன்றுகிறது. எனவே,ஆசிரியர்  மீது தக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் அவரை மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வானதி ஸ்ரீனிவாசன்  கூறினார்.

No comments

Thank you for your comments