ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அறிவிப்பு
சென்னை, டிச.13-
ஜனவரி 5ம் தேதி காலை 10:00 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அறிவித்துள்ளார்..
ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிப்பு விவரம் வருமாறு:
ஜனவரி 5ம் தேதி காலை 10:00 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை கிண்டி ராஜ்பவனிலிருந்து அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பாரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடரில் அடுத்து பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும், பிறகு மானியக் கோரிக்கை நடைபெறும்
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாரவையாளர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.
இந்நிலையில், தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கவர்னர் ஆளுநருடன் ஜனவரி 5ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத் தொடர் நடைபெறும். காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
No comments
Thank you for your comments