ஆற்று மணல் கடத்தி சென்ற வாகனத்தை சிணிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த உதவி ஆய்வாளர்...
வேலூர், டிச.25-
வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த ஜி ரவிசந்திரன் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துத்திப்பட்டு சந்திப்பு இடத்தில் டாட்டா பொலிரோ DDS TN 23 BW 5967 வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி சென்றனர். உடனே உதவி ஆய்வாளர் ஜி.ரவிசந்திரன், இரு சக்கர வாகனத்தில் சினிமா பாணியில் துரத்திசென்று மணல் கடத்திய வாகனத்தை மடக்கிபிடித்தார். உடனே வண்டியில் இருந்தவர்கள் தப்பி ஒடி விட்டனர்.
மேற்படி வண்டியில் சுமார் கால் யூனிட் ஆற்றுமணல் இருந்தது. மேற்படி வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்து, மேற்படி வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி வாகனத்தில் ஆற்றுமணல் கடத்திய சலவன் பேட்டை பகுதியை சேர்ந்த பஞ்சர் மணி என்றும், வண்டியை ஓட்டி வந்தவர் சலவன் பேட்டை பகுதியே சேர்ந்த சரவணன் என்றும், மேற்படி வாகனத்தின் உரிமையாளர் சென்னையைச் சேர்ந்த டெல்லி பாபு என்றும் விசாரணையில் தெரியவந்தது.
மேற்படி மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனி எவரும் பாகாயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்..
No comments
Thank you for your comments