பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தைக்கு 16 ஆண்டு சிறை..!
திருப்பூர்:
16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தைக்கு 16 ஆண்டு சிறை, ரூபாய் 25,000 அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அவிநாசி ரோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 24/11/2020 ஆம் தேதி அன்று சிறுமியின் தந்தை சந்திரன்(39) என்பவர் அடித்துக் காயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய், அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் உட் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, சிறுமியின் தந்தை சந்திரனுக்கு போக்ஸோ பிரிவின் கீழ் 14 ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் என மொத்தம் 16 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 25,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
No comments
Thank you for your comments