Breaking News

மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி!

நாமக்கல், டிச.21-

நாமக்கல்லில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி   விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். 

இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 20 வரை விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பேரணியில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பாக மின்சாரத்தை கையாள்வது குறித்து விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மின்வாரிய ஊழியா்கள் ஏந்தி சென்றனா்.

நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கே. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மின் இயக்கம், பராமரிப்பு செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் முன்னிலை வகித்தாா்.

பேரணி, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளா் முரளிதரன், மின்சேமிப்பு மற்றும் மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கையேட்டினை பொதுமக்களிடம் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மின் வாரியத்தின் நாமக்கல் கோட்ட உதவி செயற்பொறியாளா் ஆனந்த்பாபு, சௌந்தரபாண்டியன், உதவி பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

No comments

Thank you for your comments