அங்காளம்மன் கோவில் கட்ட இடம் ஒதுக்க வலியுறுத்தி சாலை மறியல்
கோவை:
கோவை மாவட்டம் காந்திபார்க் பகுதியில் தமிழக சேனா கட்சி நிறுவனத் தலைவர் குணா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
முத்தண்ணன் குளம் குமாரசாமி காலனியில் நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு அங்காளம்மன் கோவிலை ஸ்மார்ட் சிட்டி பணிக்காக இடித்து அதே இடத்தில் மீண்டும் கோவில் கட்ட இடம் தருவதாக உறுதியளித்த மாநகராட்சி அதிகாரிகள் தற்போது அவ்விடத்தில் இடம் தர மறுப்பதை கண்டித்தும், அதே இடத்தில் அங்காளம்மன் கோவில் கட்ட இடம் ஒதுக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சதீஷ் மாநில ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் மற்றும் சதிஷ் சூர்யா சரத் பூபதி உட்பட 100 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments
Thank you for your comments