தனியார் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர்... குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் மாசு... நோய் தொற்று அபாயம்...
காஞ்சிபுரம்:
தனியார் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் குடியிருப்பு பகுதி மற்றும் ஏரிகள் மாசு அடைந்து வருகிறது. இச்சூழலை பொதுப்பணித் துறை கவனம் செலுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த போந்தூர் ஊராட்சி திருமால் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தங்கும் விடுதியில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கியுள்ளனர்.
மேலும் இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் விடுதியினை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த கழிவு நீர் அருகிலுள்ள பிள்ளைப்பாக்கம் ஏரி வழியாக சென்னைக்கு குடி நீர் வழங்க கூடிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது என்று மிகுந்த வேதனையை தெரிவிக்கின்றனர்.
இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments