Breaking News

ஓட்டு வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கள்ளத்தனமாக கேஸ் சிலிண்டர் குடோன் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்த வந்த அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.


 காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பாவாஜி  குடியிருப்புப் பகுதி உள்ளது.  அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் கேஸ் சிலிண்டர்கள் குடோன் ஒன்று அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

காஞ்சிபுரம் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த போலியான கேஸ் குடோனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களுக்கும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலை அருகிலும் நீதிமன்றம் காவல் நிலையம் கிளை சிறைச்சாலை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும்  பள்ளியொன்றும் இந்த குடோனையொட்டி அமைந்துள்ளது. 

எதிர்பாராமல் ஏற்படும் அசம்பாவிதங்களால் பேரிடர் அபாயம் ஏற்படக்கூடும் என்கின்ற அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து இருந்தனர்.

எதிர்காலத்தில் இந்த குடோனை சுற்றியுள்ள காலிமனைப் பரப்பு மேலும் பல குடியிருப்புகளாக விரிவுபடுத்தப்படும் சூழ்நிலையில், கேஸ் சிலிண்டர் குடோனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

மாவட்ட நிர்வாகமும், மாவட்ட தீயணைப்புத் துறையும் இந்த குடோனுக்கு எப்படி அனுமதி அளித்தது என வியப்பாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

பொதுமக்கள் நலன் கருதி இங்கு அமைக்கப்பட்டுள்ள குடோனை குடியிருப்புகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து,  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஓட்டு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு நிரம்பிய  சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

குடியிருப்பு பகுதியில்  ஒரு ஓட்டு வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிலிண்டர் எந்த  ரசீதும் யாருடைய அனுமதியும் இல்லாமல் எவ்வாறு வந்தது.. அதிகாரிகள் திகைத்துப் போனார்கள் மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து அவர்களை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

No comments

Thank you for your comments