இரவு நேரக்கடைகள் திறக்க கோரிக்கை விடுக்கும் வணிகர்கள்!
நாமக்கல்,டிச.25-
நாமக்கல்லில்ல இரவு நேரக்கடைகள் திறக்க வணிகர்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.
நாமக்கல் பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரத்தில் கடைகள் செயல்பட அனுமதிப்பது தொடர்பாக வணிகர் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க தலைவர் மாணிக்கம் மற்றும் உறுப்பினர்கள் நகர காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து தங்கள் வாழ்வாதார பிரச்சனை குறித்து விளக்கினர்.
விரைவில் பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரக்கடைகள் திறந்தால் புத்தாண்டு மற்றும் பொங்கல் வியாபாரம் ஓரளவாவது ஈடு கட்டும். இப்போதுள்ள சூழலில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே வழி இன்றி தவித்து வருகிறோம்.
இரவுநேரக்கடைகள் திறந்தால் பயணிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்கின்றனர் வணிகர்கள்.
No comments
Thank you for your comments