Breaking News

நிலப்பட்டா பிழை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

கோவை:

தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நிலப்பட்டா பிழை திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

தமிழக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலோடு,  மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  அறிவுறுத்தலின்படி இம்முகாமினை மாவட்ட கழக பொறுப்பாளர் பையா கவுண்டர்(எ) கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments