புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதா ஊராட்சி நிர்வாகம்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சிவிஎம்நகர் 500க்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் இடங்களில் பொது கழுவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், குப்பை குவியலை எரித்தும், டயர் மைக்கா ஆகியவையும் தொடர்ந்தும் எரிக்கப்படுகிறது.
இதனால் காற்றில் கார்பன் அளவு அதிகமாக கலப்பதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தும் சற்றும் கண்டுகொள்ளாத நிலையில் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் செயல்படுகின்றனர்.
இதுகுறித்து மாசுகட்டுபாட்டு வாரியத்திடம் தெரிவிக்கையில், குப்பை அழிப்பதும் டயர்களை எரிப்பதும் அவற்றால் வரும் கார்பன் மூலம் காற்று மாசுபடுவது எங்கள் கட்டுப்பாட்டில் வராது என ஆய்வாளர் தெரிவித்துள்ளார். அவர்களும் எங்களுக்கு இதற்கும் சம்மந்தம் இல்லையென்ற ரீதியில் பதில் அளிக்கின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத நிலையில் பொது மக்கள் காற்றால் சுவாச பிரச்சனையால் பாதிக்கபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பலமுறை புகார் தெரிவித்தும் தான்தோன்றிதனமாக செயல்படும் அதிகாரிகளால் மனதளவில் பாதிக்கப் படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments
Thank you for your comments