தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் சிறப்பு முகாம்..
ஈரோடு:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் ஒருலட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயமின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின்பகிர் மானவட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண்/ கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
1. நகரியம் கோட்டம் :
உதவிமின் பொறியாளர் / நகர்கவுந்தபாடி பிரிவு அலுவலகம் / ஈரோடு ரோடு / கிருஷ்ணபுரம், கவுந்தப்பாடி.
2.தெற்கு கோட்டம் :
செயற்பொறியாளர் / வினியோகம் / தெற்கு கோட்ட அலுவலகம், 948 ஈ.வி.என்ரோடு ஈரோடு-9.
3.பெருந்துறை கோட்டம் :
செயற்பொறியாளர், பெருந்துறை கோட்ட அலுவலகம், 85/26, வெங்கமேடு, ஈரோடுரோடு, பெருந்துறை.
ஆகிய அலுவலகத்தில் வரும் 23.12.2021 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 வரைநடைபெறஉள்ளது.
அதுசமயம் விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து அதற்கான அறிவிப்பு கடிதம் பெற்ற விவசாயிகள் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஈரோடு மின்பகிர் மானவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறி.கு.இந்திராணி தெரிவித்துள்ளார்.
பெயர்மாற்றம் - தேவையான ஆவணங்கள்
1.இறப்பு சான்றிதழ்.
2.வாரிசு சான்றிதழ்
3.பங்குதாரர்களின் ஆட்சேபனையின்மை கடிதம்.
4.கிராம நிர்வாகஅலுவலர் சான்று
மாற்றம் செய்யகால அளவு : அன்றையதினம்
சர்வேஎண்உட்பிரிவுமாற்றம் - தேவையான ஆவணங்கள்
1. கிராம நிர்வாக அலுவலர் சான்று
2.வரைபடம்
மாற்றம் செய்யகால அளவு : அன்றையதினம்
சர்வே எண் கிணறு மாற்றம் - தேவையான ஆவணங்கள்
1.பழைய புதிய கிணற்றுக்கான கிராமநிர்வாக அலுவலர் சான்று
2. வரை படம்
மாற்றம் செய்யகால அளவு : 7 நாட்கள்
No comments
Thank you for your comments