Breaking News

மூன்றாம் அலை ... உருமாறிய கொரோனா ஒமைக்கிரான் பரவலை தடுக்க ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி சார்பில் மூன்றாம் அலை உருமாறிய கொரோனா ஒமைக்கிரானை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆலோசனை படி மாநகராட்சி ஆணையர் தலைமையில் அண்ணா அரங்கத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி சார்பில் கொரோனா மூன்றாம் அலை உருமாறிய ஒமைக்கரான் நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் பரவி வருவம் நோயினை தமிழகத்தில் பரவாத வண்ணம் மாநகராட்சி மூலமாக மாநகராட்சி ஆணையர் நாராயணன் அவர்களின் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் உறுப்பினர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். 

இவற்றில் அனைத்து வியாபாரிகள் சங்கம், காய்கறிகள் சங்கம், திருமண மண்டபம், தியேட்டர்கள் போன்றவற்றில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியும் வியாபார ஸ்தலங்களின் முன்பு முக கவசத்தை அணியம் படியும் சேனிடைசர் உபயோகிக்கும் படி முந்தைய காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து வித நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார். 

இவ்வாறு கடைபிடிக்காத வியாபார ஸ்தலங்களை முதல் இரண்டு முறை அபராதமும் மூன்றாவது முறை உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டன. 

உருமாறிய கொரோனா ஒமைக்கரான் சிருவயது குழந்தைகள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் நோயாக பரவி வருவதால் இவை சளி காய்ச்சல் போன்றவற்றின் மூலமாக விரைவாக பரவும் நோயென கண்டறியப்பட்ட நிலையில் அனைவரும் தகுந்த பாதுகாப்புடனும் மருத்துவத் துறையில் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றியும் தங்களை காத்துக் கொள்ளுமாறும் வியாபாரத் தலங்களில் கூட மக்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை பதாகைகள் உபயோகப்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சித்திரசேனா, சிவகாஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகர், இக்பால் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், வியாபார சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments