Breaking News

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக நலதிட்ட உதவிகள்...

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் மீனா ஜெயக்குமார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கு உதவித்தொகை, அரிசி மற்றும் உணவு வழங்கினார். 

இரத்தினபுரியில் வசிக்கும் அழகேஸ்வரி என்பவரின் மன வளர்ச்சி குன்றிய குழந்தையை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவிற்கும், படிப்பிற்கும் மிகவும் கஷ்டப்படுவதால் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் மீனா ஜெயகுமார் நேரில்  சந்தித்து  தொழில் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்படுவதை கூறினார்கள். 

அதை கேட்டதும்  அவர்களுக்கு தொழில் தொடங்க தையல் இயந்திரம் வழங்கினர். மேலும் மாதாமாதம் குழந்தைக்கு உதவித்தொகை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

No comments

Thank you for your comments