Breaking News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி... கந்து வட்டி கொடுமை அவலம்.....

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக பவானி பேருந்து நிலையம் அருகேயுள்ள நிதி நிறுவனம் நடத்தி வரும் ஜெகன் என்பவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபார் கடன் வாங்கி, மாதந்தோறும் வட்டி கட்டிவந்துள்ளார்.

இந்நிலையில் அசல் பணத்தை திரும்ப செலுத்த முற்பட்ட போது 13 லட்சம் பணம் கட்ட வேண்டும் என நிதி நிறுவனர் ஜெகன் கூறியதாக கூறப்படுகிறது. 

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தனது நிலத்தை அபகரிக்க முயற்ச்சிப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது மனைவியுடன் வந்த சக்திவேல் திடீரென மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையின் அவரை தடுத்து நிறுத்தி நிறுத்தினர். அந்த நபரை பாதுகாப்புடன் காவல்நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கந்துவட்டி கொடுமையால் தற்கொலைகள் தொடர்கதையாக உள்ளது...  சுரண்டும் வர்கத்தின் அதிகாரமா...  ஏழை சமூகத்தின் சாபக்கேடா... 

கலியுகத்தின் உச்சம்... கொரோனாவே மிச்சம்... 

இனியாவது திருந்துமா இந்த சமூகம்....

No comments

Thank you for your comments