NMZ குழுமத்தின் தலைவர் இயற்கை எய்தினார்... நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்..கதிர் ஆனந்த் நேரில் அஞ்சலி
ஆம்பூர் மக்களின் கொடைவள்ளல் என பெயர்பெற்ற NMZ குழுமத்தின் தலைவர் ஜனாப் என்.முகமது ஜக்கரியா சாயப் அவர்கள் இயற்கை எய்தினார். இந்த தகவலை அறிந்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்..கதிர் ஆனந்த் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன், நகர கழக செயலாளர் ஆறுமுகம், மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் குமார், செல்லப்பாண்டியன், பழனி, சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments