டாக்டர் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு விசிக சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அம்பேத்கர் நகர் மற்றும் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 65வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அம்பேத்கார் நகர் மற்றும் ஒளிமுகமது பேட்டை பகுதியில் உள்ள சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு நாள் முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் தமிழின எழுச்சி நாயகர் தொல் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி புரட்சியாளர் வழியில் சமூகநீதி கோட்பாட்டை வென்றெடுக்கவும் சனாதன கோட்பாட்டை வேறுரருக்கவும் சமத்துவத்தை நிலை நிறுத்த ஜனநாயகத்தை பரவலாக்க சமூகநீதி சமூகங்கள் ஒன்றிணைய உறுதியேற்போம் என மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து வீர முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி நகர செயலாளர் திருமாதாசன், டேவிட், ஸ்டாலின்,வழக்கறிஞர் அணி உறுப்பினர் பலர் கலந்து கொண்டன்ர்.
No comments
Thank you for your comments