Breaking News

கனரக லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்...

 காஞ்சிபுரம்

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எனக்கூறிக்கொண்டு கனரக லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரி உரிமையாளர்கள் டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு. 

புகார் மனு அளிக்க 100க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் டிஐஜி அலுவலகத்திற்கு நேரில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட மதூர், ஆர்ப்பாக்கம், படப்பை,பல்வேறு பகுதிகளில் கல்குவாரி களும் எம்சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கல் குவாரிகளில் இருந்தும், எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு எம்சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

எம்சன்ட் மற்றும் ஜல்லிக் கற்களை கொண்டு செல்லும் லாரிகளை, லாரி உரிமையாளர் சங்கத்தினர் எனக் கூறிக்கொண்டு பல்வேறு இடங்களில் வழிமறித்து, அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக கூறி, பாரத்திற்கு தகுந்தவாறு பணம் பறிப்பதாகவும், லாரி ஓட்டுனர் களையும் அடித்து உதைத்து, லாரிகளை சிறைப்பிடித்து அச்சுறுத்தி வருவதாகவும் கூறி, லாரி உரிமையாளர்கள் 100 மேற்பட்டோர் காஞ்சிபுரம் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனுவினை அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் டிஐஜி அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் டிஐஜி சத்திய பிரியா நேரில் சந்தித்து லாரி உரிமையாளர்கள் கனரக லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.

லாரி உரிமையாளர்களின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி. சத்யபிரியா உறுதி அளித்ததின் பேரில் லாரி உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments