Breaking News

வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் கட்டடம் இடியும் அவல நிலையில்... சேறும் சகதியுமாக சாலை... விவசாயிகள் பெரும் அவதி....

 வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியில்  அரசுத் தேர்வு உதவி  இயக்குனர் அலுவலகம்  மற்றும்  வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் உள்ளது .


அலுவலகத்திற்கு செல்லும் வழி  சாலை முழுவதும்  சேறும் சகதியுமாக  உள்ளது. அத்துடன் அலுவலகம் இடியும் நிலைமையில் உள்ளது.  அலுவலக ஊழியர்கள் பயத்துடன் வேலை பார்க்கின்றனர். 

வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்துக்கு  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வந்து செல்ல முடியாத  அவல நிலையில், சேறும் சகதியுமாகவும் பள்ளமாகவும் தண்ணீர் தேங்கி குளம் போல்  சாலை உள்ளது.   

வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் இங்கும் சேற்றில்தான் விழவேண்டும் போல....  

இந்த அவல நிலையை உணர்ந்து, இந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் உடன் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் கட்டடம் இடிந்து அசம்பாவிதம் நடைபெறும் முன் மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு தீர்வு காணவேண்டும்... மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு  வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊழியர்களும்  தெரிவிக்கின்றனர். 

உடனடியாக  மாவட்ட ஆட்சியர் மற்றும்   மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

No comments

Thank you for your comments