ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 14 பேர் அதிரடி கைது...
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் அனுமதி இன்றி மது விற்பனை செய்வது, குறிப்பிட்ட நேரம் தாண்டி மது விற்பனை செய்பவர்களை போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஒன்றிணைந்து கைது செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் போலீசார், மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியில் அனுமதியின்றி மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆசனூர் வனப்பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு லாட்ஜில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற பாலாஜி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதைப்போல் அரச்சலூர், கடம்பூர், அந்தியூர், கருங்கல் பாளையம், தாலுகா, அம்மாபேட்டை, புளியம்பட்டி, ஈரோடு டவுன், பவானிசாகர், கொடுமுடி, தாளவாடி, பெருந்துறை, கடத்தூர் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
No comments
Thank you for your comments