Breaking News

அபாய நிலையில் நீர் தேக்க தொட்டி... வலுக்கும் கோரிக்கை... விழித்துகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்...

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப் தொடக்க பள்ளியின் அருகில் அபாயகரமான முறையில் காட்சி அளிக்கும் தண்ணீர் நீர்த்தேக்க தொட்டியை அகற்றும் படியும், பள்ளி வளாகத்திற்குள் ஐந்து பாழடைந்த வகுப்பறைகளை அகற்றி புதிய வகுப்பறையை ஏற்படுத்தி தரவும் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப் தொடக்கபள்ளியில் ஈஞ்சம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான விஷகண்டிகுப்பம், தண்டலம், காரை போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளி வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே சேதமடைந்துள்ளன.

நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாடடுத்தாத நிலையில் கூட இன்றும் அதனை அகற்றப்படாமல் சிதிலமடைந்து காணப்படுவதால் அங்கு படிக்கும் குழந்தைகளின் உயிர்களுக்கு அச்சம் விளைவிக்கும் நிலை உள்ளது.  எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாயம் உள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றி உயிர்சேதம் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் இதேபோன்று,   5 வகுப்பறைக் கட்டடங்களும்  இடியும் தருவாயில் உள்ளன. உயிரி சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில்,  வகுப்பறைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள  நீர்த்தேக்கத் தொட்டியையும், 5 பழைய வகுப்பறைக் கட்டடங்களையும் உடனடியாக இடிக்கவும்,  பள்ளி வளாகத்திற்குள் சுதந்திரமாக மது அருந்தி வரும் மது பிரியர்களை தடுத்து நிறுத்த பள்ளி வளாகத்தைச் சுற்றி முழுமையாக சுற்றுச் சுவர்களை எழுப்பவும் இரவு நேரங்களில் மின் விளக்குகளை அமைக்கவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை வைத்துப் பராமரித்து வருபவர்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வுகளையும், எச்சரிக்கைகளையும் வழங்கி பள்ளி வளாகத்தை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த  தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சார்பாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாகவும் ஈஞ்சம்பாக்கம் கிராம மக்களின் சார்பாகவும் காஞ்சிபுரம் மாவட்ட பொது மக்கள் சார்பாகவும் காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தி உள்ளது...





No comments

Thank you for your comments