Breaking News

காட்பாடி விருதம்பட்டு பகுதியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

காட்பாடி

காட்பாடி விருதம்பட்டு பகுதியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நீர்வளத்துறை துரைமுருகன் அமைச்சர் திறந்து வைத்தார்

காட்பாடி விருதம்பட்டு பகுதியில் காட்பாடி சட்டமன்ற தொகுதி நிதி மேம்பாட்டில் இருந்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்த குமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தி.மு.க வை சேர்ந்த மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கேபிள் சீனிவாசன் வட்டச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாநகர ஆதிதிராவிடர் நல குழு Y.தேவநேசன் உள்ளிட்டோர் சிறப்பான முறையில் செய்து வரவேற்பளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த  பகுதி, வட்ட, நகர,ஒன்றியம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



No comments

Thank you for your comments