மக்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகர புதிய 12வது வட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சி மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் SKP.சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் 12வது வட்டம் மதனபாளைய தெருவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. 12வது வட்ட பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்
No comments
Thank you for your comments