Breaking News

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளியோர் 150 பேருக்கு அன்னதானம்....

காஞ்சிபுரம்:

திமுக இளைஞரணி செயலாளர்-சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் நகர திமுக இளைஞரணி சார்பில் நகர துணை அமைப்பாளர் சிலம்பு செல்வன் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியோர் 150 பேருக்கு அன்னதான உணவினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலைஞர் பவள விழா மாளிகை அருகே வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், நகர அவைத்தலைவர் சந்துரு, நகர துணை செயலாளர் ஜெகன்நாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் சோபன்குமார், யுவராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் அர்ஜூன் உள்ளிட்ட நகர கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.









No comments

Thank you for your comments