Breaking News

வேலை நேரத்தை குறைக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...

ஈரோடு:

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளில் வேலை நேரத்தை குறைக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பாக ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரமாக தற்போது  அறிவித்துள்ள பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்ற அறிவிப்பை எதிர்த்தும்,  ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலை நேரமான பகல் 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதை நடைமுறைப்படுத்தவும் என்பதனை வலியுறுத்தி வலியுறுத்தினர்... 

மேலும் பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளை மூடிடவும், சமூக விரோதிகளிடமிருந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, காலமுறை ஊதியம் வழங்கிடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

No comments

Thank you for your comments