Breaking News

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்டமேதை அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது...

ஈரோடு :

ஈரோடு மணல் மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலையத்தில் சட்ட மேதை அம்பேத்கார் அவர்களின் 65 வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.  இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணி தலைமையில் அம்பேத்கரின்  படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன துலைவர் குறிஞ்சி சிவக்குமார், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ் எல் டி சச்சிதானந்தம்,  துனை செயலாளர்கள் செந்தில்குமார்,  சின்னையன், முன்னால் மேயர் குமார்முருகேஷ், கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் லட்சுமனகுமார், முன்னால் மாமண்ற உறுப்பினர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணி , நால்ரோடு சண்முகம், தலைமைகழக பேச்சாளர் இளையகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments