தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை மாவட்ட தலைவர் ஜெகஜுவன்ராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட தலைவர் ஜெகஜீவன்ராம் தலைமையில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரானா நோய்த்தொற்று காலத்தில் முன்கள பணியாளர்களாக தன் உயிரை துச்சமாக எண்ணி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் நியாயமான 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட நடவடிக்கைகளை நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகளை அரசு பரிசீலித்து ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மதிப்பளித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றன.
இவற்றில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து பணி ஓய்வு செல்ல உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் கணினி உதவியாளர்கள் அனைவரும் இளநிலை உதவியாளர்கள் இணையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் முழு சுகாதார திட்ட வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கு மேம்படுத்தபட்ட ஊதியம் வழங்கவும் ஒன்றிய பணி மேற்பார்வையில் மதிப்பீடு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்தவும் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நிலையிலிருந்து உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் முதுநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை எனில் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் மற்றும் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் ஆகியவை நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்கள் சங்க தலைவர் ஜெகஜீவன்ராம், மாவட்ட செயலாளர் மாணிக்கவேல், அரசு ஊழியர்கள் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments