கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர்* அவர்கள் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் இன்று (21.12.2021) சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர்மேடு மேற்குப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான சுகுமார் (எ) காளி ( 22 ) த/பெ. லட்சுமிநரசிம்மன், நெ.59 / 56, பல்லவர்மேடு, காஞ்சிபுரம் என்பவரை கைதுசெய்து அவரிடமிருந்து சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டு அவர்மீது சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுததப்பட்டார்.
காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
No comments
Thank you for your comments