Breaking News

ரூ.75 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல! ... பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை, டிச.23-

திருக்கோவிலூரில் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 15 இருளர் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருக்கோவிலூரில் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 15 இருளர் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது போதுமானதல்ல என்றாலும் இதை அரசு உடனே வழங்க வேண்டும்.

இருளர் இன பெண்கள் காவலர்களால் சீரழிக்கப்பட்ட வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இது குறித்து கடந்த மாதம் இதே நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த வழக்கை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யும் பணியைக் கூட செய்யாமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. இந்த வழக்கை கண்காணிக்க பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments

Thank you for your comments