Breaking News

மீண்டும் மஞ்சப்பை திட்டம்... இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச.23-

தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை தீவிரமாகிறது, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று  தொடங்கி வைக்கிறார்.

பிளாஸ்டிக் கலாசாரம் தலைத்தூக்காத காலக்கட்டத்தில் மஞ்சள் பை தான் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பையாக இருந்தது, எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு மக்கள் மஞ்சள் பையை தான் பயன்படுத்துவார்கள். 

சுற்றுச்சுழலுக்கு உகந்த பையாக மஞ்சப்பையே இருந்தது, அதே போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் துவக்கி வைக்கிறார் இதற்கான நிகழ்ச்சி  சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது, இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மீண்டும் மஞ்சப்பை  இயக்கத்தை துவக்கி வைக்கிறார்.


மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல 100 ஆண்டுகள் ஆகும். 

பிளாஸ்டிக் மாசுப்பாட்டினால் பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல் வாழ் உயிரினங்கள் உட்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது. 

இதனை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.கோவிட்- 19 பரவல் காரணமாக பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்தும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டது. 

தற்போது தமிழ்நாடு அரசு இத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாகப் பணிகளைத் துவங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ”மீண்டும் மஞ்சப்பை” பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு  நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று (23-12-2021) துவக்கி வைக்கிறார்.


No comments

Thank you for your comments