அர்ச்சகர், ஓதுவாருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உயர்வு... அமைச்சர் சேகர்பாபு
சென்னை, டிச.23-
கோவில் பயிற்சி பள்ளியில் பயிலும் அர்ச்சகர், ஓதுவார் போன்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 1000 ரூபாய் இந்த மாதத்திலிருந்து 3000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கத்தின் 79வது ஆண்டு தமிழசை விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த ஆட்சி காலத்தில் கோவில் பயிற்சி பள்ளிகளில் பயில்பவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டதாக கூறிய அமைச்சர், அந்த பயிற்சி பள்ளிகளில் பயிலும் அர்ச்சகர், ஓதுவார் போன்றவர்களுக்கு நடப்பு மாதம் முதல் ஊக்கத் தொகை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments