திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை... ஆர்டிஓ விசாரணை
கே.வி.குப்பம், டிச.24-
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரின் மகன் கௌதம் (21) என்பவருக்கும் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணியப்பன் என்பவரின் மகள் கலைவாணி (20) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்னாள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே தற்போது கலைவாணி தனது கணவர் வீடான வேப்பங்கனேரியிவ் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கே.வி.குப்பம் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலைவாணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பெண்ணின் தந்தை கண்ணியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் குடியாத்தம் ஆர்டிஓ தனஞ்செயன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
No comments
Thank you for your comments