சட்ட மேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்.... விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு:
இந்தியாவின் முதல் சட்ட மேதை அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்....
ஈரோட்டில் அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தையினர் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் அவரது படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறியாளர் அணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சாதிக் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் அக்கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் ரஞ்சித் பால்ராஜ், சிறுத்தை ரியாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று அண்ணல் அம்பேத்கரின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments