Breaking News

திருவள்ளூரில் 500 மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்டம், ஆயில்மில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில், 500 மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

இந்நிகழ்வில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் - திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர், மகளிரணி துணை செயலாளர் குமரி விஜயகுமார், நி.கோவிந்தம்மா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments

Thank you for your comments