Breaking News

கணித மேதை இராமனுஜம் அவர்களின் 134வது பிறந்த தினம் கொண்டாட்டம்

 சேலம்:

 சேலம் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக கணித மேதை இராமனுஜம் அவர்களின் 134வது பிறந்த தினம் மற்றும் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. 

இதனை முன்னிட்டு  மூன்று நாட்கள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.  கணித மேதை இராமனுஜம் அவர்களின் கையெழுத்து பிரதிகளின் இரண்டு அரிய தொகுப்புகளும், உலகளவில் சிறந்த கணித மேதைகளின் புகைப்படங்களின் தொகுப்புகளும், கணிதத்துறைக்கு அவரின் பங்களிப்புகளும், சாதனைகளும் மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன. 

இந்த விழாவினை முனைவர் உமாராணி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் முனைவர் ரோஜா, முனைவர் கீதா அவர்கள் பங்கேற்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் முனைவர் உமா மற்றும் கணிதத்துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments