Breaking News

காட்பாடியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் 4 சவரன் செயின் மாயம் போலீசார் விசாரணை

 காட்பாடி:

காட்பாடியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் 4 சவரன் செயின் மாயம் போலீசார் விசாரணை...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பகுதியை சேர்ந்த பத்மாவதி(வயது 65).

இவர்   நேற்று, காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் பின்புறமுள்ள ராணுவ படை வீரர் கேண்டினில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் நான்கு கைப்பைகள் உடன் பயணித்துள்ளார்.

இதனையடுத்து காட்பாடி குடியாத்தம் ரோடு அருகே சென்றபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயின் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பத்மாவதி உடனடியாக கூச்சலிட்டு குடியாத்தம் ரோடு பகுதியில் பேருந்தை நிறுத்தி பேருந்து முழுதும் சோதனை செய்த பொழுதும் செயின் கிடைக்கவில்லை.

உடன் இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் பத்மாவதி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காட்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்கு பதிவு செய்து பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த செயினை யாராவது பறித்து  சென்றார்களா அல்லது தவறி விழுந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தற்பொழுது காட்பாடி பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 83 சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருந்தும் காட்பாடி பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காவலர்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டால் உரிய இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க இயலாது என சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

No comments

Thank you for your comments