Breaking News

வாயு கசிவு காரணமாக குளோரின் வாயு சுத்திரிப்பு ஆலையில் விபத்து... பலருக்கு மூச்சு திணறல்... மருத்துவமனையில் அனுமதி......

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையம் பகுதியில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதரன் கெமிக்கல் குளோரின், வாயு சுத்திகரிக்கும்  ஆலை உள்ளது. 


இந்த ஆலை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு  இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில்  இன்று 11.12.2021  குளோரின் சுத்திகரிப்பு ஆலையில் தீடிரென குளோரின் வாயு  கசிவு ஏற்பட்டு உள்ளது.  இதை சரி செய்யும் பணியில் ஆலை உரிமையாளர் தாமோதரன்  ஈடுபட்டு உள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக குளோரின் கசிவு ஆலை முழுவதும் பரவியதால்,  சம்பவ இடத்திலேயே தாமோதரன் உயிர் இறந்துள்ளார்.  மேலும் அப்பகுதியில் இருந்த 13-க்கும் மேற்பட்டவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.  

மூச்சு திணறல்களால் பாதிக்கப்பட்டவர்களை  அப்பகுதியைச் சேர்ந்த மற்ற நபர்கள் பத்திரமாக மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். 


சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஆலையில் மீதமுள்ளவர்களையும்  பத்திரமாக மீட்கும் பணியை மேற்கொண்டனர்.  

குளோரின் கசிவு  மேலும் ஏற்படமால் இருக்க தீயனைப்பு துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து நிலைமை கேட்டறிந்தார்..

No comments

Thank you for your comments