Breaking News

வீடு புகுந்து நகைகளை திருடிய 3 குற்றவாளிகள் கைது.... ரூ.1,00,000 மதிப்புடைய நகைகள் மீட்பு

காஞ்சிபுரம், டிச.27-

ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், மணிமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனூர், லட்சுமிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி ( 80 ) த / பெ.சொக்கலிங்கம் என்பவரது வீட்டில் 26.08.2021 அன்றும் மற்றும் மாடம்பாக்கம் லலிதா நகரைச் சேர்ந்த வெங்கடேசன் ( 42 ) த / பெ.சோனாசலம் என்பவரது வீட்டில் 08.12.2021 அன்றும் சில அந்நிய நபர்கள் வீடு புகுந்து பீரோவை உடைத்து தங்க நகைகளை திருடியது சம்மந்தமாக பார்த்தசாரதி என்பவர் 27.08.2021 அன்றும், வெங்கடேசன் என்பவர் 10.12.2021 அன்றும் கொடுத்த புகாரின் பேரில் மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரியை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா டாக்டர் எம். சுதாகர்,  அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர் திருபாலாஜி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில்,  

1) பாலாஜி (25) த/பெ.வேல்முருகன், எண்.39, பாரதியார் நகர், ஆரம்பாக்கம், 

2 ) சிவக்குமார் ( 22 ) த பெ.மகாலிங்கம், எண்.6 / 146 , வள்ளலார் நான்காவது தெரு, வஞ்சுவாஞ்சேரி மற்றும்  

3 ) அலெக்ஸ் ( எ ) இயேசுதாஸ் ( 25 ) த / பெ.இயேசு அந்தோணி, காமராஜர் தெரு, ஆரம்பாக்கம் ஆகியோர் மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தது.

இதையடுத்து மேற்படி எதிரிகளை கைது செய்தும், திருடுபோன தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

No comments

Thank you for your comments