ஏழை எளியோர் 250 பேருக்கு அரிசி, பிரெட், பிஸ்கட் வழங்கல்...
காஞ்சிபுரம்:
திமுக இளைஞரணி செயலாளர்-சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் நகர திமுக இளைஞரணி சார்பில் நகர துணை அமைப்பாளர் ஆர்.ஏ.மணிகண்டன் ஏற்பாட்டில் திருக்காலிமேடு அருகே ஏழை எளியோர் 250 பேருக்கு அரிசி,பிரெட்,பிஸ்கட் உள்ளிட்டவற்றை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாணவரணி செயலாளர்- காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், நகர அவைத்தலைவர் சந்துரு, நகர துணை செயலாளர் ஜெகன்நாதன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் சோபன்குமார், யுவராஜ், அபுசாலி,நகர இளைஞரணி அமைப்பாளர் அர்ஜூன்,எல்லப்பன்,கிரி,சாட்சி சண்முக சுந்தரம், குமணன், மூர்த்தி, ராமு, குமார், மோகன், மாதவன், பன்னீர், சுரேஷ் உள்ளிட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments