இலவச வீட்டுமனை பட்டா உட்பட நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு... ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம்
ஈரோடு, டிச.2-
ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கு ஆண்டு வருமானம் உயர்த்தப் பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை புதிய அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மின் மோட்டாருடன் கூடிய இலவசதையல் இயந்திரம், இலவசபித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேற்படிதிட்டங்களுக்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளின் தற்போதைய ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/-லிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் அரசின் நலத்திட்டங்களான மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டு மனைபட்டா பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஈரோடுமாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
செ.வெ.எண்.03 / 01-12-2021
No comments
Thank you for your comments