24-12-2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வேலூர்:
டிசம்பர் ‘ 2021 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (24.12.2021 - வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் (5வது தளம்) நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.
மேலும் கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளார்கள். எனவே, வேலூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
No comments
Thank you for your comments