Breaking News

வேலைவாய்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை

வேலூர்:

2014, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழ்நாடு அரசால் வெளியடிப்பட்டுள்ளது. 

மேலும் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை  புதுப்பிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையினை அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

(1)  இச்சலுகையைப் பெற விரும்பும் வேலைநாடுநர்கள், மார்ச்      2022க்குள் விடுப்பட்ட பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

(2)  இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும்.

(3) மார்ச் மாதத்திற்கு பின் பெறப்படும் கோரிக்கைள் நிராகரிக்கப்படும்.

(4)  01.01.2014-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

முன்னாள் படைவீரர்கள் இச்சலுகையினை பயன்படுத்தி பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன்  தெரிவித்துள்ளார். 

அதிகாரப்பூர்வ இணையதளம்

No comments

Thank you for your comments